
ஜோதிடத்தில் புத்திகாரகன் என்று போற்றப்படும் புதன் பகவான் அறிவுக்கு காரகம் வகிப்பவர். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் நல்ல அறிவாளியாகவும், படிப்பறிவு மிக்கவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும் விளங்குவார். புதனின் அருள் நமக்கு இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழலையும் அறிவுக்கூர்மையோடு சமாளித்து வெற்றி காணலாம். அத்தகைய புதன் பகவானுக்குரியவற்றை கீழே காணலாம்,
நிறம் – பச்சை
நாடி – வாத நாடி
ஜாதி – வைசிய ஜாதி
ரத்தினம் – மரகதம்
வாகனம் – குதிரை, நரி
குணம் – தாமஸம்
சமித்து – நாயுருவி
சுவை – உவர்ப்பு
பஞ்சபூதம் – வாயு
திசை – வடக்கு
ஆட்சி வீடு(சொந்த ராசிகள்) – மிதுனம், கன்னி
மூலதிரிகோணம் – கன்னி
உச்ச வீடு – கன்னி
நீச்ச வீடு – மீனம்
நட்பு வீடு – ரிஷபம், சிம்மம், துலாம்
பகை வீடு – கடகம், விருச்சிகம்
தெய்வம் – விஷ்ணு(பெருமாள்)
Leave a Reply