வீட்டில் விளக்கேற்றுவது எப்படி?

deepam

வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.

அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*